ராணுவ வீரருக்கு மரியாதை

பாரதம் சீனா இடையே கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரரும் ஒருவர். அவரது தியாகத்தை போற்றும் வகையில், சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் 2,400 சதுர அடி வீட்டுமனை பட்டாவை அவரது குடும்பத்திற்கு வழங்கினார். அதற்கான நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு இறந்த ராணுவ வீரரின் மனைவிக்கு வீட்டு மனை பட்டா, அதற்கான சொத்து ஆவணங்களை வழங்கினார்.