மகனை மீட்க கோரிக்கை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியை சேர்ந்த அர்ஜுனன் கலைச்செல்வியின் மகன் சந்தோஷ்குமார்; கோவை அரசு கல்லுாரியில் பி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து வந்தார். அப்போது அவரை சில மாவோயிஸ்ட்டு பயங்கரவாதிகள் அடிக்கடி சந்தித்து பேசி மூளை சலவை செய்துள்ளனர். பிறகு சந்தோஷை மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைத்து விட்டனர். இவரின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள். மகன் மீண்டு வருவான் என்ற எட்டு ஆண்டுகளாக காத்திருந்த அவர்கள், மாவோயிஸ்ட்டு பயங்கரவாதிகளிடம் இருந்து தங்களது மகனை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.