தமிழ் தாத்தா பெயர் வைக்க கோரிக்கை

பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தமான், ‘ரிப்பன் பில்டிங் என்று ஆங்கிலப் பெயரை வைத்துக் கொண்டு ‘தமிழ் வாழ்க’ என பலகை மட்டும் வைப்பதால் தமிழ் வளர்ந்து விடாது. தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து அச்சில் ஏற்றி பெரும் தொண்டாற்றிய தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் நினைவைப் போற்றி ‘உவே.சா.மாளிகை’ என அதற்கு பெயரிட வேண்டும்’ என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.