பாதிரியை கைது செய்ய கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டி என்ற ஊர். அங்கு கிறிஸ்துவ சர்ச் ஒன்று உள்ளது. அதில் ஜோசப் ராஜா என்பவர் பாதிரியாக உள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது உடனடியாக மாற்றுத் திறனாளி சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று பாதிரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அது மட்டுமின்றி பாதிரியின் தந்தை, ஆர்ப்பாட்டம் செய்ய வருபவர்களை மிரட்டியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்த்னர். உடனடியாக பாதிரியார் மற்றும் அவரது தந்தையையும் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.