பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி, குழந்தையின் 18 வயது பூர்த்தியான பிறகு அந்த பணத்தை வட்டியோடு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.அரசின் இல்லங்கள், விடுதிகளில் தங்க முன்னுரிமை.கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்.கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளில் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 லட்சம்.பெற்றோரை இழந்து உறவினர் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு பராமரிப்புச் செலவாக மாதம் தோறும் ரூ.3,000 உதவிதொகை.உள்ளிட்ட அறிவிப்புகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.