பகுத்தறிவு தி.மு.க

சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி பொற்காலம், தி.மு.க ஆட்சி கற்காலம். தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசினர். நீட் தேர்வு ரத்து, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு எடுப்போம், மகளிருக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை போன்ற பல வாக்குறுதிகளை அளித்தனர். அதில் எதாவது ஒன்று நிறைவேற்றியுள்ளதா?இந்த நம்பிக்கை மோசடி ஆட்சி மீது மக்கள் வெறுத்துப்போய் கடும் கோபத்தில் உள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் இது வெளிப்படும். பகுத்தறிவு பேசும் தி.மு.க, மாநிலங்கள் அவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பௌர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளது. அம்மா உணவகங்களை படிப்படியாக குறைத்து கருணாநிதி பெயரில் உணவகம் திறக்க முயற்சிக்கின்றனர். மகளிருக்கு இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என அனைத்தையும் மூடிவிட்டனர். நல்ல திட்டங்களை முடித்துவைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறினார்.