தெருக்களில் வசிப்பவர்களுக்கும் ரேஷன்

தெருக்களில் வசிப்பவர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கு வேண்டும், அதற்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முக்கியமாக, தெருக்களில் வசிப்பவர்கள், குப்பை சேகரிப்பவர்கள், தெருக்களில் பொருட்களை விற்பவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள் போன்றவர்களைக் கண்டறிய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரும், தற்போதைய கொரோனா பெருந்தொற்று சூழலில் இந்தச் சட்டத்தால் பயனடைவர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனடையும் தனிநபர்களையும், குடும்பங்களையும் கண்டறியும் பொறுப்பு, அவர்களுக்கு குடும்ப அட்டைகளை விநியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, மாநில, யூனியன் பிரதேச அரசுகளையே சார்ந்தது.