பலாத்கார குற்றவாளி கைது

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ கூட்டு பலாத்கார வழக்கில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியை லக்னோ காவல்துறை ஒரு சிறு என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்ததாக லக்னோ காவல்துறை துணை ஆணையர் (கிழக்கு), பிராச்சி சிங் கூறினார். “தலைமறைவாக இருந்த குற்றவாளி இம்ரான் என அடையாளம் காணப்பட்டார். அவரது இருப்பிடம் குறித்து எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எங்கள் குழு அவரைப் பின்தொடர்ந்தது. இம்ரான் தப்பி ஓட முயன்றார். நாங்கள் அவரைத் தடுக்க அவரது காலில் சுட்டோம். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான ஆகாஷ் திவாரியை போலீசார் ஏற்கனவே அக்டோபர் 17 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்” என அவர் தெரிவித்தார். முன்னதாக இந்த கூட்டுப் பலாத்கார வழக்கில் அலட்சியமாக இருந்ததற்காக காவல்நிலைய பொறுப்பாளர் ஹுஸ்தியா ஹுசைன் அப்பாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.