ஹிந்து சகோதரிகள் பலாத்காரம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்நகரில் வசிக்கும் 16 மற்றும் 17 வயதுடைய ஹிந்து சகோதரிகள், காலைக்கடன் கழிக்க வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றனர். அப்போது, எதிரில் வந்த இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இருவரையும் தூக்கிச் சென்று, பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடினர். அந்த சிறுமியரின் தந்தை அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த உமைர் அஸ்பாக், காஷிப் அலி ஆகிய இரண்டு முஸ்லிம் நபர்கள்தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, உமைர் அஸ்பாக் கைது செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளியான காஷிப் அலி, நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றுள்ளார்.