ராஜஸ்தானில் ராகுலுக்கு மூக்குடைப்பு

காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானுக்கு, விவசாய சட்ட எதிர்ப்புப் பேரணிக்காக இரண்டு நாட்கள் பயணமாக ராகுல் சென்றார். அதையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அம்மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் விவசாயிகளே கிழித்தும் ராகுலுக்கு கருப்பு கொடி காட்டியும் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் ராகுலை சந்தித்துப் பேச முயன்ற அவர்களை ஜெய்பூர் மாநிலத்திற்கு உள்ளேகூட அம்மாநில அரசு அனுமதிக்கவில்லை. எங்கள் பெயரை பயன்படுத்தி ராகுல் கட்சிப் பேரணி நடத்துகிறார், எங்களை சந்திக்காமல் குழந்தைத்தனமாக நடந்துகொள்கிறார் என ஜெய்வீர் சிங் என்ற விவசாயப் பிரதிநிதி கூறினார்.