ராஜா படேரியா கைது

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா, பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் என்ற நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், “மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார். மக்களை ஜாதி, மதம், மொழியின் பெயரால் பிளவுபடுத்துவார்.பட்டியலின பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற விரும்பினால் மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் .அவர் பேசி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து ராஜா படேரியா மீது மத்தியப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளது.