உயிரை பறிக்கும் மழைநீர் வடிகால்

சென்னையை அடுத்த மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக இருந்தது, பள்ளத்தில் மழை நீரும் தேங்கி இருந்தது. மேலும், அங்கு பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற 42 வயதான தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி என்பவர், இந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார். குறித்த காலத்தில் முடிக்கப்படாமலும் உரிய பாதுகாப்பின்றியும் மெத்தனமாக நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் உயிர் பலிகள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தி ஆளும் தி.மு.க அரசும் மாநகராட்சி நிர்வாகமும் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. மழைக்காலம் துவங்கிவிட்டது, இன்னும் மழை அதிகமாகும்போது என்னென்ன விபரீதங்கள் நடக்குமோ என சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இப்போதே பீதியில் ஆழ்ந்துள்ளனர்.