ரயில் கர்மயோகி

ரயில் கர்மயோகி இயக்கத்தின் கீழ், 51 ஆயிரத்திற்கும் அதிகமான முன்கள ரயில்வே பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பயிற்சி நிறுவனமான இந்திய ரயில்வே போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களால் இந்த ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். கர்மயோகி இயக்கம் மத்திய அரசால் 2020ம் ஆண்டு செப்டம்பர் 20ல் தொடங்கப்பட்டது. உலகின் எந்தப் பகுதியிலும் திறன் கட்டமைப்பு முன்முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக இது செயல்படும். ரயில்வே அமைச்சகம் பிரதமரின் அழைப்பை முதலில் ஏற்று இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது.