ராகுலுக்கு புரிதல் இல்லை

எல்லைப் பிரச்சனை என்பது சிக்கலான விஷயம். எல்லை பாதுகாப்பு குறித்தும் தேசத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சரியான புரிதல் ஏதுமில்லை. அவரின் கேள்விக்கு பதில் அளித்தால் அது தேச நலனுக்கு உகந்ததாக இருக்காது. அர்த்தமற்ற அவரது பேச்சுக்கு மத்திய அரசு எவ்வித முக்கியத்துவமும் அளிப்பதில்லை. அப்படி அவரது கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தால், அமைச்சர்கள் வேறு உருப்படியான வேலைகளை பார்க்க முடியாது என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.