சாவர்க்கரை அவமதிக்கும் ராகுல் காந்தி

இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், “கடந்த 2017ம் ஆண்டு முதலே ராகுல் காந்தி தொடர்ந்து எனது தாத்தாவை அவமதித்து வருகிறார். வீர் சாவர்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சி, சாவர்கரை அவமதிப்பதையும் அதற்காகவே. கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடியின தலைவர் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி ஜன் ஜாதிய கவுரவ் திவஸ் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய அவர், ‘அந்தமான் சிறையில், சாவர்கார் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் தன்னை விடுவிக்குமாறு மன்றாடியிருந்தார். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் வீர் சாவர்கர் பென்ஷன் பெற்றார். சிறையில் இருந்து வந்தபின்னர் அவர் பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்தார். வீர் சாவர்கருக்கும், பிர்ஸா முண்டாவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 24 வயதிலேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போரிட்டவர் பிர்ஸா முண்டா. அவருடை கொள்கைகளை இன்று பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸும் எதிர்க்கின்றன’ என கூறியிருந்தார். இப்படி, ராகுல் காந்தி தொடர்ந்து திட்டமிட்டே சுதந்திர போராட்ட வீரர் வீர் சவர்கரை தொடர்ந்து அவமதிப்பதால் ராகுல் காந்தி மீது மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போகிறேன்” என தெரிவித்தார்.