விரக்தியின் உச்சத்தில் ராகுல்

பாட்னாவில் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கா் பிரசாத், பாரத சீன எல்லைப் பிரச்னையை குறித்து ராகுல் காந்தி அதிகம் பேசுகிறார்.ஆனால், உண்மையில் அவரது தாத்தா நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் பாரதப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது.தேசத்தை கட்டமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவா் சர்தார் வல்லபபாய் படேல்.ஆனால், காங்கிரஸ் கட்சி எப்போதுமே அவருக்கு உரிய மரியாதை அளித்தது இல்லை.தனது நடைப்பயணத்தில் கூட ராகுல், படேலுக்கு மரியாதை செலுத்தவில்லை.மேலும், ஹிந்து மக்களின் நம்பிக்கைக்கு எதிராக ராகுலும் அவரது கட்சியும் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன.குஜராத் சோம்நாதா் கோயிலை புதுப்பிக்க சர்தார் வல்லபாய் படேல் முழுமையாக செயல்படாமல் தடுத்து அவரது முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டவா்தான் அன்றைய பிரதமா் நேரு.அக்கோயிலை அன்றைய குடியரசுத் தலைவா் ராஜந்திர பிரசாத் மூலம் அக்கோயிலை திறக்கவும் அவ்ர் அனுமதிக்கவில்லை.அன்று முதல் காங்கிரஸின் ஹிந்துமத வெறுப்பு என்பது தொடா்ந்துகொண்டே வருகிறது.தேசத்திற்கு எதிராக டெல்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கோஷங்களை எழுப்பிய கன்னையா குமார் போன்றவா்கள்தான் ராகுலின் பின்னால் உள்ளனா்.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராணுவ வீரா்களுக்கு குண்டு துளைக்காத உடை அளிக்கப்படவில்லை.ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலிலும் ஊழல்கள் நடைபெற்றன.காங்கிரஸ் கட்சி சமீப காலமாக அடைந்து வரும் தொடா் தோல்விகளால் ராகுல் காந்தி விரக்தியின் உச்சத்தில் உள்ளார்.இதன் காரணமாகவே மக்களிடையே அவா் வெறுப்புணா்வை பரப்பி வருகிறார்.அவரது அரசியல் எதிர்காலம் தொடா்ந்து மங்கி வருகிறது.காங்கிரஸ் கட்சி, 2024 மக்களவைத் தோ்தலிலும் மோசமான தோல்வியைச் சந்திக்கப்போவது உறுதி.இனியாவது ராகுல் வெறுப்பு பிரசாரத்தைக் கைவிட்டு தனது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என கூறினார்.