அறநிலையத்துறைக்கு கேள்வி

சென்னை திரிசூலத்தில் உள்ள‌ திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ”ஆக்கிரமிப்புகளை அகற்றாத அறநிலையத்துறை செயல் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும், 2014 முதல் அங்கு பணியில் இருந்தவர்கள் குறித்த தவல்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன் கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.