புதுச்சேரி அனுமதி

புதுச்சேரியில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் ஏற்பட்ட தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் மாலை 5 மணி வரை பார்சல் வினியோகம் செய்யலாம். அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 16 முதல் 100 பணியாளர்களுடன் இயங்க அனுமதி என பல தளர்வுகளை அறிவித்துள்ள புதுச்சேரி அரசு, அலுவலகங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இயங்க வேண்டும். சமூக இடைவெளியுடன் ஊழியர்கள் பணி புரிய வேண்டும். தடுப்பு நடவடிக்கைளையும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.