பி.எஸ்.எல்.வி. சி 53

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வரும் 30ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி 53 ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படுகிறது. இது பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 55 வது ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டில் டிஎஸ்.இ.ஓ என்ற 365 கிலோ எடை கொண்ட, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரோ ஆப்டிக் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை பார்க்கும் வசதி கொண்டது. சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைக்கோளான 155 கிலோ எடை கொண்ட என்.இ.யு சாட் மற்றும் கொரியாவின் 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப் 1 உள்பட 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. அத்துடன் புவி சுற்றுப்பாதையுடன் பூமியை நிலையானதாகச் சுற்றும் சோதனைத் தொகுதி ஒன்றும் ராக்கெட்டில் பொருத்தி ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.