பாகிஸ்தான் ஆதரவு கோஷம்

மத்திய பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இதில் கட்னி மாவட்டம் சக்கா கிராமத்தில் நடந்த தேர்தலில் ரஹிசா பேகம் என்ற முஸ்லிம் பெண் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய வெற்றி ஊர்வலத்தில் பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ வெளியானது. அப்பகுதி பொதுமக்களும் இதுகுறித்து புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.