ராணுவ வீரர்களுக்கு பிரதமர் புகழாரம்

கார்கில் வெற்றி தினத்தையொட்டி தேசத்தை பாதுகாக்க கார்கிலில் தங்களின் துணிச்சலை வெளிப்படுத்தி உச்சநிலை தியாகம் செய்த வீரம் செறிந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், “கார்கில் வெற்றி தினம் என்பது நமது பாரதத்தாயின் பெருமை மற்றும் புகழின் அடையாளம். இந்தச் சந்தர்ப்பத்தில், தாய்நாட்டைப் பாதுகாப்பதில் தங்கள் வீரத்தை வெளிப்படுத்திய, துணிச்சலான தேசத்தாயின் அனைத்து மகன்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள். ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.