விருதை வென்ற ‘தி எலிபண்ட் விஸ்பெரர்ஸ்’ குழுவுக்கு பிரதமர் பாராட்டு ஆஸ்கர்

சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றதற்காக, ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ், படத் தயாரிப்பாளர் குணீத் மோங்கா மற்றும் ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் மொத்தக் குழுவிற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அகாடமியின் ட்விட்டருக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“இந்த கௌரவத்திற்காக @EarthSpectrum, @guneetm மற்றும் ‘The Elephant Whisperers’ முழு குழுவிற்கும் வாழ்த்துகள், நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை அவர்களது பணி அற்புதமாக எடுத்துக்காட்டுகிறது. #Oscars “