பிரதமர் மோடி கேரளா வருகை

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு கேரள மாநிலம் காலடி கிராமத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் பிறப்பிடமான ஸ்ரீ ஆதி சங்கரர் ஜென்ம பூமி க்ஷேத்திரத்துக்கு செல்கிறார். நாளை (செப்டம்பர் 2) காலை 9.30 மணிக்கு கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில், முதன் முதலில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த புதிய கப்பல் இயக்கப்படுவதன் மூலம் பாரதத்தில் 2 செயல்பாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும். இந்நிகழ்வில் இந்திய கடல்சார் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான புதிய கடற்படைக் கொடியை அறிமுகம் செய்கிறார். அதன்பிறகு கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு சென்று அங்கு ரூ. 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.