ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி

ஜப்பானில் ஜி7 மாநாடு, பப்புவா நியு கினியாவில் இந்தோ பசிபிக் உச்சி மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, நேற்று ஆஸ்திரேலியா சென்றார், அங்குள்ள சிட்னியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் ஆயிரக்கணக்கான பாரத வம்சாவளியினர் கலந்துகொண்டனர். இதில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின்போது பார்வையாளர்கள் ‘மோடி, மோடி’ என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகைத்தரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதி வரவேற்பு பிரம்மாண்ட அளிக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீடுகள், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.