மதக்கலவரம் தூண்டும் பாதிரிகள்

சங்கரன்கோவில் திருநெல்வேலி சாலையில் திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டும்விதமாக, சங்கரன்கோவில் பாதிரியர்கள் முயற்சி செய்துள்ளனர். ஒரு பிணத்தை கொண்டுவந்து அருள்மிகு கரும்புளி சாஸ்தா திருக்கோயிலுக்கும் அருள்மிகு குரும்புடையார் சாஸ்தா திருக்கோயிலுக்கும் நடுவே குழியைதோண்டி புதைத்து அப்பகுதியை இடுகாடாக்க முயற்சித்தனர். தகவல் அறிந்த இந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதில் அரசுக்கு சொந்தமான தண்ணீர் குழாயையும் அவர்கள் சேதப்படுத்தினர். பாதிரியார்கள் அங்கு ஹிந்து தெய்வங்களையும் இழிவாக பேசினர். இது அங்குள்ள ஹிந்துக்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் முற்றியது .தகவலறிந்த சின்னகோவிலான்குளம் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக சட்டம் ஒழுங்கை சரிசெய்தனர்.