பெண்களை இழிவுபடுத்தும் மதகுரு

கேரளாவில் முஸ்லிம் மதகுரு சிராஜ் உல் பலுஸ்ஸி, நல்ல உடை அணிந்த பெண்களை ‘விபச்சாரிகள்’ என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.  ‘வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்கள் விபச்சாரத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். கணவனைத் தவிர மற்ற ஆண்களின் தொடுதலை விரும்பாத எந்தப் பெண்ணும் வாசனை திரவியத்தைப் பயன்படுத்த மாட்டாள்’ என பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அவர் பேசியுள்ளார். இவர் இப்படி பேசுவது இது முதல்முறை அல்ல. மேலும், பல முஸ்லிம் மத குருமார்கள் கேரளாவில் இதுபோன்று  பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசிவருகின்றனர். இதுகுறித்து நன்றாக தெரிந்திருந்தும் கேரள அரசு, இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.