பெண்கள் குழுவில் பாதிரி அநாகரீகம்

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அடைக்காதோடு பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்க சர்ச்சில் பாதிரியாக இருப்பவர் செபாஸ்டியன். இந்த சபையில் பெண்களுக்கான ஜெபம் குறித்த வாட்ஸ்அப் குழு உள்ளது. அக்குழுவில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உள்ளனர். இந்த குழுவில் பாதிரி செபாஸ்டியன், கடந்த ஞாயிறு அன்று ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், மனந்தமாடி மறைமாவட்டத்தில் புகார் அளித்துள்ளனர். அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். புகார்களை பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையின்போது, தனது கை தவறி அந்த வாட்ஸ் அப் குழுவுக்கு வீடியோக்கள் சென்றுவிட்டதாக பாதிரி தெரிவித்துள்ளார். எனினும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அந்த சர்ச்சில் உள்ள பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.