மதிப்புமிக்க புதிய விருதுகள்

பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் வலியுறுத்தினார். விருதுக்குரியோரை தேர்வு செய்யும் பணியில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதன் மூலம், விருது மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பல்வேறும் அறிவியல் மற்றும் சுகாதாரத் துறைகளின் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அப்போது, “தற்போது வழங்கப்பட்டு வரும் தனி நன்கொடை விருதுகள், பெல்லோஷிப் உள்ளிட்ட 300க்கு மேற்பட்ட விருதுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தேசிய மருத்துவ கவுன்சில் வழங்கி வரும் பி.சி.ராய் விருது உள்ளிட்ட 3 விருதுகளை மறுசீரமைக்க வேண்டும். அதிக மதிப்பு கொண்ட புதிய விருது ஒன்றை உருவாக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் சாந்தி ஸ்வருப் பட்நாகர் விருதுகளை தொடர்ந்து வழங்க வேண்டும். தகுதிவாய்ந்த விஞ்ஞானிகளுக்கு ‘நோபல்’ பரிசு போன்று ‘விஞ்ஞான் ரத்னா’ என்ற புதிய விருதை உருவாக்கி வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகருடன் ஆலோசனை நடத்த வேண்டும்” என அஜய் பல்லா கூறினார். இதைத்தவிர 37 விருதுகளை ரத்து செய்துவிட்டு அதிக அந்தஸ்து கொண்ட புதிய விருதுகளை உருவாக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைகளுக்கு யோசனை தெரிவித்தார்.