பிங்கலி வெங்கய்யாவுக்கு புகழாரம்

பிங்காலி வெங்கய்யாவின் பிறந்தநாளான நேற்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், “மாமனிதர் பிங்கலி வெங்கய்யாவின் பிறந்தநாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நாம் மிகவும் பெருமிதம் கொண்டுள்ள மூவர்ணக் கொடியை வழங்கிய அவரின் முயற்சிகளுக்காக நமது தேசம் எப்போதும் அவருக்கு கடமைபட்டிருக்கும். மூவர்ணக் கொடியிலிருந்து பலத்தையும், ஊக்கத்தையும் பெற்று தேசத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.