அஞ்சல் துறை எச்சரிக்கை

இந்திய அஞ்சல்துறை மூலமாக அரசு மானியம், போனஸ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்ற வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் போலியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த போலியான செய்திகளை நம்பி பிறந்த தேதி, பிறந்த ஊர், வங்கி கணக்கு எண், கடவுச் சொல் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்று அஞ்சல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.