பொங்கல் தொகுப்பு ஊழல்

திருப்பூரில் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி, மிகப்பெரிய பொய் மூட்டை என்பதற்கு, நகைக்கடன் தள்ளுபடி ஒரு உதாரணம். நகைக்கடன் வாங்கிய 75 சதவீதம் பேரை ஏமாற்றிவிட்டனர். பொங்கல் பரிசு என்ற பெயரில் தரம் இல்லாத பொருட்களை கொடுத்து மக்களை அவமானப்படுத்தி விட்டனர். இதனால், தி.மு.க அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர் நலன் என கூறிக் கொண்டு வெளிமாநிலங்களில் பொருட்களை கமிஷனுக்கான வாங்கியுள்ளனர். புளியில், பல்லி இருந்ததாக கூறியவர் மீது வழக்கு போட்டனர். அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார். பொங்கல் பரிசு பொருட்கள் ஊழல் விரைவில் வெளிவரும். நுால் விலை ஏற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காதது மாநில அரசின் தவறு. இதற்காக, ஜனவரி 21ல் திருப்பூரில் உண்ணாவிரத போராட்டமும், 25ம் தேதிக்கு பின், தொழில் துறையினரை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் சந்திக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை கைகாட்டிவிட்டு, தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது. தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, மூன்று நாட்களில் ஜி.எஸ்.டி உயர்வு மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பூரை சிங்கப்பூருக்கு இணையாக மாற்றும் திட்டம் பிரதமரிடம் உள்ளது’ என தெரிவித்தார்.