மத நம்பிக்கையில் காவல்துறை தலையீடு

அடிமாத கோயில் திருவிழாக்களில் நேர்த்திக்கடன் என்ற பெயரில் குழந்தைகளுக்கு அலகு குத்துவது, தீச்சட்டி எடுக்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்படுவார்கள், கோயில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குடியாத்தம் சப் டிவிஷன் டி.எஸ்.பி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். இப்படி ஹிந்து மத பழக்க வழக்கங்களை, பண்பாட்டை அழிக்க நினைக்கும் மதரீதியாக செயல்படும் குடியாத்தம் காவல் அதிகாரிக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத சுதந்திரத்திற்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.