பி.எப்.ஐ தடை விசாரணை தீர்ப்பாயம்

நாடு முழுவதும் பி.எப்.ஐ அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை இணைந்து அண்மையில் சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில் பி.எப்.ஐ மற்றும் அது சார்ந்த 8 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் 1,400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், பி.எப்.ஐ தடை தொடர்பான உபா (UAPA) சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி தினேஷ்குமார் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். பி.எப்.ஐ மீதான தடை குறித்து இந்தத் தீர்ப்பாயம் விசாரித்து முடிவை அறிவிக்கும். அடுத்த 6 மாதங்களில் தீர்ப்பாயத்தின் விசாரணை நிறைவு பெறும். போதிய ஆதாரங்கள் இருந்தால் பி.எப்.ஐ மீதான தடை உறுதி செய்யப்படும். ஆதாரங்கள் இல்லை என்று கருதினால் தடையை தீர்ப்பாயம் ரத்து செய்யும்.