மசூதியை அகற்ற மனு

தென்காசி அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் மசூதி கட்டடப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும், மசூதியால் தென்காசியில் மீண்டும் மத மோதல் உருவாகாமல் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.