ஹிந்து தமிழர் பேரவை மனு

ஹிந்து தமிழர் பேரவை நிறுவனர் கோபால் சார்பில், அதன் பேரவை நிர்வாகிகள், ஹிந்து அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் நிலமோசடி, கன்னியம்மன் கோயில், மதுரை தேனுார் கோயில்களில் நடைபெற்ற நில மோசடி, அறநிலைய துறையின் பதிவேட்டில் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயம் உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.