சீரம் நிறுவனத்திற்கு அனுமதி

ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசியை, இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது.இந்த தடுப்பூசிகள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பாரதத்திலேயே இந்த ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகளை பரிசோதனை செய்து தயாரிப்பதற்காக, சீரம் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.அதற்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது.மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஹதப்சார் மையத்தில், இந்த ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன.