தி.மு.க அரசுக்கு மக்கள் கேள்வி

தமிழகத்தில்உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு மூன்று நாட்களுக்கு அனுமதி மறுப்பு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் மூடல் என கொரோனாவை காரணம் காட்டி கட்டுப்பாடுகளை விதிக்கும் தி.மு.க அரசு, இதே காலகட்டத்தில் செயல்பட்ட மசூதிகள், சர்ச்சுகளில் ஏன் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை? அங்கு எல்லாம் கொரோனா பரவாதா, அவர்கள் இந்த தேசத்தின் மக்கள் இல்லையா, அவர்கள் கொரோனாவால் இறந்தால் தி.மு.க பொறுப்பேற்குமா அல்லது அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளதை அவர்கள் மறந்துவிட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.