மக்கள் பங்கேற்க வேண்டும்

அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறவுள்ள எட்டாவது சர்வதேச யோகா தின விழாவில், நாட்டு மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற யோகா திருவிழாவில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், ‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டை கொண்டாடும் வேளையில் இந்த ஆண்டு யோகா தினம் மேலும் சிறப்புப் பெறுகிறது. விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது’ என தெரிவித்தார்.