ஆதாருடன் பான் இணைப்பு

வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் ‘பான் கார்டு’ வைத்திருப்போர், அதனை வரும், 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான இறுதிக்கெடு கடந்த ஆண்டு ஜூன் 30 என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த காலக்கெடு நடப்பாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.  பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.