பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம்

தமிழகத்தில் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் தி.மு.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், மதுரையின் சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பார் என்ற அறிவிப்பு கடந்த 3ம் தேதி வெளியானது. இந்நிலையில் அவரது பெயர் நோட்டீசில் இருந்து நீக்கப்பட்ட்டுள்ளது. இது மதுரை மாவட்ட தி.மு.கவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலாக முனைவர் ஜெயரஞ்சன் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ள விஷயம், இதுவரை வெளியான ஆடியோ விவகாரங்கள், அமைச்சரவை மாற்றம் பற்றி உலவும் செய்திகள் குறித்த பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.