ஆப்கனுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் துணைத் தலைவர் அம்ருல்லா சலேஹ், தனது டுவிட்டர் அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தான் ராணுவமும், ஆப்கானிஸ்தான் விமானப்படையும், தலிபான் கைப்பற்றியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை மீண்டும் கைப்பற்ற முயற்சித்தால், அவர்கள் பாகிஸ்தான் விமானப்படையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தலிபான்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தொடர்ந்து தலிபான்களுக்கு ஆயுத தளவாட உதவிகளை பாகிஸ்தான் செய்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்.