பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்

இன்னும் சிறிது காலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே, இந்தியாவுடன் இணையும்”, என மத்திய அமைச்சர் விகே சிங் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் நிருபர்களை சந்தித்த விகே சிங்கிடம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை குறித்தும், அதில் பா.ஜ.,வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விகே சிங், கொஞ்சம் பொறுத்திருங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்”. எனக்கூறினார்.