ஆக்ஸிஜன் சேவை

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் வேளையில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல்களும் தாமதமும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, வீடுகளில் இருந்தவாறு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மூலம் சிகிச்சை மேற்கொள்ள வசதியாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ‘ஜெயின் இண்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன்’ அமைப்பினர் நூறுக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தேவைப்படுவோருக்கு இலவசமாக ஐந்து  நாட்களுக்கு வழங்கி சேவை செய்து வருகின்றனர். சென்னையில் ஆக்ஸிஜன் தேவை இருப்பவர்கள் இவர்களை 9434343430 என்ற எண்ணில் தொடர்புகொண்டு நோயாளியின் விவரம், மருத்துவ சான்றை இணையத்தில் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். சரிபார்ப்புக்குப் பிறகு அடுத்த 2 மணி நேரத்திற்குள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பெறலாம். இதற்கு ரூ. 5,000 முன்வைப்பு காசோலை பெறப்படுகிறது. இயந்திரத்தை திருப்பி வழங்கும்போது காசோலை திருப்பித் தரப்படுகிறது.