பா.ஜ.கவில் இணைந்த சொந்தங்கள்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பா.ஜ.கவில் இணைந்தனர். இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழியில் ஊழலற்ற நல்லாட்சியை உள்ளாட்சியில் வழங்கிடக் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் சோழன் பழனிசாமி முன்னிலையில் தமிழக பா.ஜ.கவில் இன்று இணைந்தனர்” என தெரிவித்துள்ளார்.