உண்மையை சொன்ன ஒவைசி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் நமது தேசத்தின் வீணடிக்கப்பட்ட சக்தியாக மாறிவிட்டது. காங்கிரஸ் தனது இருப்பை இழந்துவிட்டது. அதற்க்கு உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை வீணாக்காதீர்கள்” என கருத்துத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்தியப் பிரதேச காங்கிரசார், “முதலில் வகுப்புவாத பேச்சுக்களை ஒவைசி நிறுத்த வேண்டும். பாரம்பரிய கட்சியான காங்கிரசை குறைகூற ஒவைசிக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை” என கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.