வெளியேறும் இந்தியர்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதைத் தொடர்ந்து தாலிபான்கள் பல பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கு இருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட இந்தியர்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பாரதம் தன் தூதரக ஊழியர்களை வெளியேற்றி வருகிறது. ஹெராத் மற்றும் ஜலாலாபாத்தில் உள்ள இரண்டு தூதரகங்கள் அங்கு தனது செயல்பாட்டை நிறுத்திவிட்டன. எனினும், காந்தஹாரிலும் காபூலிலும் அவசரகால சேவைகளுக்காக தூதரகங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.