தாயகம் திரும்பும் நமது அடையாளங்கள்

பாரதத்தின் கலை, பண்பாடு, ஆன்மிகத்தை வெளிப்படுத்தும், எட்டு பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து பாரதத்திற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளன என ‘நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியா’ அறிவித்துள்ளது. சுபாஷ் கௌர் என்ற, சிலைத் திருடனால் திருடி விற்கப்பட்ட இவைகளில் மகிஷாசுர மர்த்தினி கற்சிலை குஜராத்தைச் சேர்ந்தது. நடன நிலை திருஞானசம்பந்தர், நாயன்மார் சிலை, தமிழகத்தை சேர்ந்தவை. மேலும் ராஜஸ்தான், உ.பி., ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சிலைகளும் ஓவியங்களும் அடங்கும்.