தொடரும் சோதனைகள்

சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த மூன்று நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அண்ணாநகர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மோகன், அவருடைய மகனும் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியும் ஜி ஸ்கொயர் உரிமையாளர்களின் ஒருவருமான கார்த்திக் ஈஸ்வர் மற்றும் ஆடிட்டர் சண்முகராஜ், லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் அர்ஜுன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 50 மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்றது. சென்னையில் உள்ள கார்த்திக் அலுவலகம் மற்றும் சில இடங்களில் சோதனை நிறைவடைந்தது. எனினும், மீதமுள்ள இடங்களில் தொடர்ந்து 4வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜி ஸ்கொயர் நிறுவனம் காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி குவித்துள்ளது வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை மூலமாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ஜி ஸ்கொயர் நிருவனம் எந்தெந்த பகுதிகளில் பத்திரப்பதிவு செய்துள்ளது என்பது குறித்து முதற்கட்டமாக அரக்கோணம், காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளனர் என கூறப்படுகிறது.