பெண்களுக்கு ஓசி பஸ்

சமீபத்தில் சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய தி.மு.கவின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,  “உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா, இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். பஸ்சில் பெண்கள் எல்லாம் எப்படி போகிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்.” என்றார். இதற்கு பெண்கள், பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், அமைப்புகள் என பல தரப்பில் இருந்தும் கண்டனம் வலுத்து வருகிறது. பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா? பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ? என அவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.