காலாவதியான காங்கிரஸ் நிறுவனம்

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், “காங்கிரஸ் தலைவர்கள், இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக நினைக்கிறார்கள். பா.ஜ.க அவர்களிடமிருந்து எப்போதோ ஆட்சியை பறித்து விட்டது. பாரதத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இயல்பான ஜனநாயக அமைப்புகள் உள்ளன. அவை கட்சிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேபோல காந்தி குடும்பத்தையும் நீங்கள் ஒரு எதிர்க்கட்சியாக பார்க்கக் கூடாது. அவர்கள் காலாவதியாகிப் போன மருந்து. அவர்களால் ஒரு எதிர்க்கட்சியாக செயல்படவே முடியாது. ஏனெனில் அவர்கள் தங்களை எதிர்க்கட்சியாக உணர்வதே இல்லை. மோடி வலுக்கட்டயமாக தங்களிடமிருந்து பிரதமர் பதவியை பறித்து விட்டதாகவும், அது என்றும் தங்களுக்கே சொந்தமானது என்றும் நினைக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் போது, காங்கிரஸ் கட்சி, தங்களது எதிர்க்கட்சிகளை கலைக்க சட்டப்பிரிவு 365’ஐ தவறாக பயன்படுத்தியது. நாட்டில் குடும்ப ஆட்சி முறையை காங்கிரஸ் உருவாக்கியது. அவர்கள் நாட்டை இயங்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால் அது மீண்டும் நடக்காது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அதிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும்” என தெரிவித்தார்.